Police Department News

மக்கள் ஏன் சட்டம் படிக்க வேண்டும்

மக்கள் ஏன் சட்டம் படிக்க வேண்டும்

நம் நாட்டில் ஆயிரக்கணக்கான சட்டங்களும் லட்சக்கணக்கான அரசாணைகளும் அமலில் இருக்கும் போதும் பொதுமக்கள் தங்களின் சட்ட அறியாமையினால் சட்ட விதி மீறல்களில் சாதனை படைத்து வருகிறார்கள் என்றால் மிகையில்லை. நாட்டு மக்கள் நலமுடன் வாழவே சட்டங்கள் இயற்றப்படுகிறது ஆனால் அச்சட்டங்களை பொதுமக்கள் ஓரளவேணும் சட்டத்தினை படித்து தெரிந்து அதன்படி வாழ வேண்டும் அவ்வாறு இல்லாமல் நம் நாட்டில் மட்டும்தான் இவ்வளவு குற்றங்கள் நடக்கின்றன வேறு நாடுகளில் இவ்வாறு இல்லை என்றும் காரணம் சட்டம் சரியில்லையென்றும் புலம்பல் புராணம் பாடக்கூடாது நாட்டு மக்களின் நன்மைக்காகவே சட்டங்கள் சரியாகவே உறுவாக்கப்படுகிறது. அதனை அமல் படுத்த வேண்டிய அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்யாது போனால் பொதுமக்களாகிய நாம்தான் அத்தவறினை சுட்டி காட்டி அவர்களுடைய கடமையை செவ்வனே செய்ய நாம் ஓரளவேணும் சட்டம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.