Police Department News

தென்காசியில் வெளிநாடு சென்று திரும்பிய என்ஜினீயர் தற்கொலை-தூக்கில் பிணமாக தொங்கினார்

தென்காசியில் வெளிநாடு சென்று திரும்பிய என்ஜினீயர் தற்கொலை-தூக்கில் பிணமாக தொங்கினார்

தென்காசி மேலவாலி பன்பொத்தை இ.பி. ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி. ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் சேதுராமன்(வயது 29) என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அங்கு 3 ஆண்டுகள் வேலை பார்த்த நிலையில் சமீபத்தில் அவர் சொந்த ஊருக்கு திரும்பினார்.

அப்போது வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணத்தை தொழில் தொடங்கு வதற்காக ரூ.2 லட்சம் தன்னிடம் கொடுக்குமாறு சேதுராமன் அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த பணத்தை வைத்து இளைய மகன் மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், இதனால் பணம் தீர்ந்துவிட்டதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த சேதுராமன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.