Police Department News

மதுரை மேலமடையில் வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மதுரை மேலமடையில் வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மதுரை மேலமடையை சேர்ந்தவர் ராஜேசுவரி (70). சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.

பீரோவில் இருந்த ரூ.7ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோசாகுளம் திருமலை நகரை சேர்ந்தவர் சலீம் (61). இவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.அந்த பைக் சம்பவத்தன்று திருடு போனது.

இதேபோன்று தபால்தந்திநகர் விரிவாக்கம் கோமதி நரை சேர்ந்த சுரேஷ்குமாரின் (42) பைக்கும் திருடு போனது. இது குறித்து கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆனையூரை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.