Police Recruitment

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

மதுரை நகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அதிரடியாக அனைத்து பகுதிகளையும் கண்காணித்தனர்.

தெப்பக்குளம் மாரி யம்மன் மேற்குத்தெருவில் புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த பிரதீப் குமார் சோனி (45) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 கிலோ புகையிலை பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர்.

தெப்பக்குளம், கீரைத்துறை, சுப்பிரமணிய புரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு பதுக்கிவைத்து விற்ற புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இதில் தொடர்புடைய 9 பேரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.