Police Recruitment

நிலத்தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

நிலத்தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மூங்கில் மடுவு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வராணி (வயது35). இவருக்கும், அஜ்ஜனஅள்ளி பகுதியை சேர்ந்த செல்வராணியின் அக்கா மகன் சூரிய குமாருக்கும் நிலம் சம்மந்தமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சூரியகுமார் அவர் பயன்படுத்திய நிலத்தில் நீச்சல் குளம் கட்டுவதற்கான பணியை மேற்கொண்டுள்ளார். இதனை செல்வராணி கணவர் பெருமாள் நிலத்தை கிரயம் செய்த பின்னர் கட்டுமான பணியை மேற்கொள்ளலாம் என்று கூறி நீச்சல் குளம் கட்டும் பணியை தடுத்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த சூரியகுமார் வெளியூரில் இருந்து கூலிப்படை ஆட்களை அழைத்து வந்து பெருமாளை கடுமையாக அரிவாளால் தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த பெருமாள் கை முறிவுடன் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக அவரது மனைவி செல்வராணி ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பெருமாளை தாக்கிய சூரியகுமார் (35), கிருஷ்ணகிரி சேர்ந்த வெற்றிவேல் (21), சேது (21), டெண்டுல்கர் (21), நாட்ராம்பள்ளியை சேர்ந்த ஆகாஷ் (22) உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்பொழுது சேது மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரையும் ஏரியூர் இன்ஸ்பெக்டர் யுவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோர் கிடுக்கிப்பிடி விசாரணையில் குற்றவாளிகள் ஐந்துபேர் மீது பத்துக்கும் மேற்பட்ட குற்றசம்பவங்களில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்திருப்பது தெரியவந்தது. மேலும் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.