Police Recruitment

பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கோவிலுக்குள் அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கல்யாணி நேற்று பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வருவதை சிசிடிவி கேமரா மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு நபர் சந்தேகப்படும்படியான முறையில் கோவிலுக்குள் செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு இணை ஆணையர் கல்யாணி கோயில் அலுவலர் மூலம் அவரை வரவழைத்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்தார்.

பின்னர் அவர் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்டைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

மேலும் அவர் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தவறான முறையில் அவர்களை கோவிலுக்குள் அழைத்து செல்ல முயன்றது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published.