Police Recruitment

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஏ.கே. நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அம்சு பாண்டி. இவரது மனைவி கிருஷ்ணவேணி ( வயது 42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

ஆசிரியை தற்கொலை

கிருஷ்ணவேணி செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் ஆசிரியை யாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணவேணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்தவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணவேணி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.