Police Recruitment

மதுரையில் இளம்பெண்கள் மாயம்

மதுரையில் இளம்பெண்கள் மாயம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிருத்திவிராஜ். இவரது மகள் அச்சின் (வயது 19). இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாயமான மகள் குறித்து அவரது தாய் ரேவதி உசிலம்பட்டி டவுண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத் தைச் சேர்ந்தவர் அமிர்தம். இவரது 17 வயது மகள் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.