Police Recruitment

சிவகங்கை மாவட்டத்தில் காரில் வந்து ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்

சிவகங்கை மாவட்டத்தில் காரில் வந்து ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்

சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் பிள்ளை வன ஊரணி அருகே சிவப்பு கலர் காரில் 3பேர் வந்தனர். காரில் இருந்து இறங்கி நோட்டமிட்டபடி இருந்த அவர்கள் அந்தப் பகுதியில் மேய்ச்சலில் இருந்த 2 ஆடுகளை காரில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காரில் ஆடு கத்தும் சத்தம் கேட்டதால் காரை வழிமறித்து சத்தம் போட்டனர். உடனடியாக காரை திருப்பிச் செல்ல முயன்றனர்.

ஆனால் கார் ஸ்டார்ட் ஆகாததால் 3 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். அதில் 2 பேர் ஊர் மக்களிடம் கையும் களவுமாக சிக்கினர். ஊர் மக்கள் காரில் இருந்த ஆட்டை மீட்டு சிக்கிய வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி போலீசார் ஆடு திருடியவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் திருப்புவனம் பாப்பாகுடியை சேர்ந்த ராமச்சந்திரன், ராஜா என்பதும், தப்பி ஓடியவர் மணி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.