Police Recruitment

மல்லசமுத்திரம் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன் குடும்பத்தினர் 3 பேர் மீது வழக்கு பதிவு.

மல்லசமுத்திரம் கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன் குடும்பத்தினர் 3 பேர் மீது வழக்கு பதிவு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாது (வயது.47),
இவருக்கும் இவரது அண்ணன் முருகன் (வயது. 65) என்பவருக்கும் 24 சென்ட் நிலம் சம்மந்தமாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாது தனது நிலத்தில் மாட்டிற்க்கு புல் அறுத்து கொண்டிருக்கும் போது மாது வின் அண்னன் முருகன், முருகனின் மனைவி தவமணி (வயது.50),
இவர்களின் மகன் பெரியசாமி (வயது.30) மூவரும் சேர்ந்து
தகராறில் ஈடுபட்டு கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த மாது,
பாலக்கோடு அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலக்கோடு போலீசில் புகார் அளித்ததில் பேரில் பாலக்கோடு போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.