Police Recruitment

முதலிப்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 4 பேர் கைது.
ஒருவர் தலைமறைவு .

முதலிப்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 4 பேர் கைது.
ஒருவர் தலைமறைவு .

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முதலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் (வயது.42)
இவர் இன்று தனது நிலத்தை சுற்றி கம்பிவேலி அமைத்து கொண்டிருந்தார்.
அப்போது அதேபகுதியை சேர்ந்த சஞ்சய்காந்தி (வயது.32), கெளரப்பன்(வயது. 26), சக்திகுமார் (வயது. 23), சக்திவேல்(வயது.19), முருகானந்தம்(வயது.23) ஆகியோர் அத்துமீறி JCB மூலம் சண்முகத்திற்க்கு பாத்தியப்பட்ட இடத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி உள்ளனர்.
இதுகுறித்து சண்முகம் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்தவர்கள்,
சண்முகத்தை ஆபாச வார்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சண்முகம் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார்,
புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து
சஞ்சய்காந்தி, கெளரப்பன், சக்திகுமார்,சக்திவேல், ஆகிய நால்வரையும் கைது செய்தனர்,
மேலும் தலைமறைவான முருகானந்தத்தை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.