Police Recruitment

மதுரை மாவட்டத்தில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மதுரை போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மதுரை போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் போக்குவரத்துக் குறித்து போக்குவரத்து துணை கமிஷனர் குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது, “மாசி வீதி ஆவணி மூல வீதிகளில் உள்ள வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுவனங்களுக்குரிய வாகன நிறுத்தமிடத்திலேயே நிறுத்தப்பட வேண்டும். மேலும் வடக்கு ஆவணி மூலவிதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
கனரக சரக்கு வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே நகருக்குள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. எனவே அந்த வாகனங்கள் அந்த நேரத்திற்குள் வந்து சென்று விட வேண்டும். அதில் விதி மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.எனவே விதிமீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது..

எனவே விதிமீறும் வாகன ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும். நகரில் பெரும்பாலும் உயிரிழப்பு விபத்துக்கள் தலைக்காயத்தால் ஏற்படுகிறது. எனவே மோட்டார் சைக்கிள்களில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வண்டியை ஓட்டி செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆடம்பரமாகவும், பகட்டாகவும் தெரிவதற்காக மோட்டார் சைக்கிள்களின் புகை போக்கி, நம்பர் பிளேட், பம்பர் ஆகியவற்றை மாற்றம் செய்து அபாயகரமாகவும், அதிவேகமாகவும் சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் ஓட்டி செல்கின்றனர். மேலும் அவர்கள் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே மாணவர்களின் பெற்றோர் இதற்கு இடம் கொடுக்காமல் அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும் போலீசார் சார்பில் சாலை சந்திப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்பட்டு வரும் விழிப்புணர்வை நினைவூட்டி மாணவர்களை நல்வழி படுத்த வேண்டும். இதன் மூலம் மதுரை நகரில் விபத்தில்லா மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு உதவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.