Police Department News

தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம், செந்தூரன் காலனி, அம்மா பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.
மேலும் அங்குள்ள இறைச்சி கடைகளில் வீசப்படும் மாமிசங்களை தின்றுவிட்டு தெருவில் சண்டையிடுகின்றன. அத்துடன் வீடுகளுக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை இழுத்துச் செல்வதாகவும், தனியே நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுவதாகவும்,
மேலும் இரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் குரைப்பதால் சரியாக தூங்க முடிவதில்லை என்றும், குழந்தைகளை தனியே அனுப்ப முடிவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனையும் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களை பரிதவிக்க விடும் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்குதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.