Police Department News

செல்போனுக்கு ‘லிங்க்’ அனுப்பி 2 பேரின் வங்கி கணக்கில் ரூ.54 ஆயிரம் மோசடி

செல்போனுக்கு ‘லிங்க்’ அனுப்பி 2 பேரின் வங்கி கணக்கில் ரூ.54 ஆயிரம் மோசடி

செங்குன்றம்:
புழல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லத்தீப். இவரது செல்போனுக்கு குறுந்தகவலுடன் ஒரு லிங்கும் வந்தது. அந்த குறுந்தகவலில், உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை உண்மை என்று நம்பிய அப்துல்லத்தீப் தனது வங்கி கணக்கின் விபரங்களை குறிப்பிட்ட லிங்கில் பதிவு செய்தார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி வணக்கில் இருந்த ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. மர்ம நபர்கள் நூதன முறையில் வங்கியில் இருந்து பணத்தை சுருட்டி இருப்பது தெரியவந்தது.

இதுபோல் புழலை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் மர்ம கும்பல் வங்கி கணக்கு விபரம், பான் எண் விபரங்களை பதிவு செய்யக்கூறி குறுந்தகவல் மற்றும் லிங்க் அனுப்பி ரூ.10 ஆயிரத்தை சுருட்டினர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசார் கூறும்போது, செல்போனுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல், லிங்கை கிளிக் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இணையதள முகவரி சரியாக இருந்தால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். இல்லை எனில் வங்கிக்கு நேரில் சென்று தங்களது சந்தேகங்கள் குறித்து கேட்டால் பணம் இழப்பை தவிர்க்கலாம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.