Police Department News

மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சிறப்பு சோதனை புகையிலை பொருட்கள் விற்பனை சிறப்பு சோதனை -33 குற்றவாளிகள் கைது- 18.912 கி.கி. புகையிலை பொருட்கள் பறிமுதல்.

மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் சிறப்பு சோதனை புகையிலை பொருட்கள் விற்பனை சிறப்பு சோதனை -33 குற்றவாளிகள் கைது- 18.912 கி.கி. புகையிலை பொருட்கள் பறிமுதல்.

மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் சிறப்பு சோதனையினை (24.11.2023) முதல் (29.11.2023) வரை மேற்கொண்டனர்.

இந்த சிறப்பு சோதனையில் 33 நபர்கள் சட்டவிரோதமாக புகையிலை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்குறிப்பிட்ட 33 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 18.912 கிலோ கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்புத் துறையினரின் மூலமாக ரூ.1,50,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.