Police Department News

: மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி

: மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி

மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக தல்லாகுளம் தமுக்கம் சந்திப்பில் சாலைப் பாதுகாப்பு மாத தலை கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் திரு. லோகநாதன் IPS., அவர்கள் தலைமை வகித்து விழிப்புணர்வு பேரணியை துண்டுப்பிரச்சார நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய. மஞ்சல் பைகள் வழங்கியும் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் போக்குவரத்து துணை கமிஷனர் குமார் போக்குவரத்து கூடுதல் துணை கமிஷனர் திருமலைகுமார் மற்றும் உதவி கமிஷனர்கள் செல்வின் மாரியப்பன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆயுதப்படை காவலர்கள் 100 பேர் மதுரை மாவட்ட. வாகன விற்பனை பிரதிநிதிகள்
மற்றும் பொதுமக்கள் 400 பேர் இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து பேரணியாக சென்றனர்

Leave a Reply

Your email address will not be published.