Police Department News

மதுரையில் வினாயகர் ஊர்வவலம் 2 நாள் நடத்த போலீஸ் அனுமதி

மதுரையில் வினாயகர் ஊர்வவலம் 2 நாள் நடத்த போலீஸ் அனுமதி

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை நகரில் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பலரும் பல்வேறு இடங்களில் இரண்டடியில் துவக்கி பத்தடி வரையிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்து வருகின்றனர் மதுரை நகரில் 327 இடங்களில் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி வரை சிலைகள் வைத்து வழிபடவும் ஊர்வலம் நடத்தவும் போலீஸ் அனுமதித்திருந்த நிலையில் பலரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை தினமும் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் இம்மானுவேல் சேகர் குருபூஜை உள்ளிட்ட வகைகளுக்கான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் கருதி மதுரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலர்களை நாளை நாளை மறுநாள் செப்டம்பர் 12, 13 என இரு நாட்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது எனவே நேற்றும் இன்றும் ஊர்வலங்கள் நடத்தப்படவில்லை எனினும் ஆர்வலர்கள் பலரும் சிறிய அளவிலான விநாயகர் சிலை எடுத்துச் சென்று வைகையாற்று நீர் நிலைகளில் நேற்று கரைத்தனர்

Leave a Reply

Your email address will not be published.