Police Department News

மதுரை மாநகரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி

மதுரை மாநகரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பேரணி

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி மதுரையில் இன்று இரு சக்கர வாகனப் பேரணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மதுரை வேளாண்மை கல்லூரி வரை நடைபெற்றது. இவ்வாகனப் பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ,மாவட்ட துணை ஆட்சியர், வருவாய் அலுவலர்,வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Leave a Reply

Your email address will not be published.