Police Recruitment

முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது

மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது 65 அதே பகுதியில் புதிதாக வீடு கட்டும் அவர் பூச்சு வேலை முடிந்ததால் சுவற்றின் மீது தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டினுள் தண்ணீர் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளரான சண்முகசாமி மகன் முத்துப்பாண்டி (31) என்பவர் தங்கராஜை மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து முத்துப்பாண்டி கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.