Police Recruitment

ஐ.டி., ஊழியர்களுக்கு குறி வைக்கும் ‘டுபாக்கூர்’ சி.பி.ஐ., அதிகாரிகள்

ஐ.டி., ஊழியர்களுக்கு குறி வைக்கும் ‘டுபாக்கூர்’ சி.பி.ஐ., அதிகாரிகள்

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்கும் ‘சைபர் கிரைம்’ கும்பல் .ஐ.டி. நிறுவன ஊழியர்களை குறிவைத்து செயல்படுவது தெரிய வந்துள்ளது

மதுரையைச் சேர்ந்தவர் கண்ணன் மகாதேவன் இவர் பெங்களூரில் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணிபுரிகிறார் இவரிடம் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஒரு லட்ச ரூபாய் சுருட்ட முயன்றுள்ளனர்

இதுகுறித்து கண்ணன் கூறியதாவது இரு தினங்களுக்கு முன் என் மொபைல் போனுக்கு குரல் பதிவு செய்யப்பட்ட குறுஞ் செய்தி வந்தது அதில் உங்கள் மொபைல் போன் எண்களை பிளாக் செய்யப் போகிறோம் மேலும் தொடர்புக்கு எண் ஒன்பதை அழுத்தவும் எனக் கூறப்பட்டிருந்தது

ஒன்பதை அழுத்தினால் எதிர் முனையில் பெண் ஒருவர் பேசினார் உங்கள் மீது மும்பை போலீசில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன நீங்கள் உடனடியாக காவல் நிலையம் வாருங்கள் எனக் கூறினார் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது பின் அந்தப் பெண் அழைப்பை சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு அனுப்புவதாக கூறினார் அப்பொழுது பேசிய நபர் நம் மீது அக்கறை உள்ளவர் போல உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்களா? அம்மா எப்படி இருக்கீங்க என்றெல்லாம் கேட்டுவிட்டு நீங்கள் மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் சிம் கார்டு வாங்கி உள்ளீர்கள் அதன் வாயிலாக எதிரிகள் உங்கள் ஆதார் எண்ணை திரட்டி உள்ளனர் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஐந்து கோடி ரூபாய் வரை சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.

கைது நடவடிக்கை தவிர்க்க உங்கள் அறையில் யாரையும் அனுமதிக்காமல் ஸ்கைப் வாயிலாக விசாரணைக்கு ஆஜராகுங்கள் என உத்தர விட்டார் அதன்படி ஆஜர் ஆனேன் உங்களை கைது செய்யாமல் இருக்க நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும்

அதற்கு நான் தெரிவிக்கும் வங்கி கணக்கில் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்யுங்கள் என்றார் இது டுபாக்கூர் வேலை என எனக்கு அப்பொழுதே புரிந்து விட்டது. ஒரு லட்சம் ரூபாயில் துவங்கி கடைசியில் ஆயிரம் ரூபாயாவது அனுப்புங்கள் எனக் கேட்டனர்

எனக்கு மட்டுமல்ல இதுபோல் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் பலரைக் குறிவைத்து மோசடிக் கும்பல் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published.