Police Recruitment

உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளரின் உடலை மயானத்திற்கு சுமந்து சென்ற மாவட்ட எஸ்பி மற்றும் காவல்துறையினர்

உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளரின் உடலை மயானத்திற்கு சுமந்து சென்ற மாவட்ட எஸ்பி மற்றும் காவல்துறையினர்

திருவரம்பூர் சட்ட ஒழுங்கு இரண்டில் காவல் ஆய்வாளராக பணிபுரியும் பிரியா என்பவர் பணி முடிந்து அவரது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த திடீர் வேகத்தடையில் எச்சரிக்கை குறியீடு இல்லாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் பிரியா இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.‌

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அவரது இறுதி அஞ்சலி நடைபெற்றது.‌இதில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட காவல்துறையினர் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பிரியாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது உடலை சுமந்து மயானத்திற்கு எடுத்துச் சென்று 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறையினரின் முழு மரியாதையுடன் தகனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.