Police Recruitment

போலீசில் புகார் கொடுத்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

போலீசில் புகார் கொடுத்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சிங்கம்புணரியில் தன் மீது போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தவர் வீட்டின் மீது 17 வயது சிறுவன் பெட்ரோல் குண்டு வீசினார்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மேல்மலை குடியிருப்பை சேர்ந்தவர் முனுசாமி மகன் முருகன் வயது 38 இவரது அலைபேசியை மதுரை மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் இரவல் வாங்கி பேசிவிட்டு திரும்ப கொடுக்காமல் சென்று விட்டார் இதுகுறித்து முருகன் சிங்கம்புணரி போலீசில் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார்
இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவன் நேற்று அதிகாலை 12 30 மணியளவில் முருகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினார் சத்தம் கேட்டு வெளியே வந்த முருகன் சுவற்றில் பற்றிய தீயை அணைத்தார் சிறுவன் தப்பி ஓடிவிட்டார் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் மீது ஏற்கனவே சிங்கம்புணரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி அலைபேசி திருட்டு உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன

Leave a Reply

Your email address will not be published.