Police Department News

மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வாகன ஓட்டிகள் ஊக்குவிப்பு

மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வாகன ஓட்டிகள் ஊக்குவிப்பு

போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளைப் பற்றி விழிப்புணர்வு செய்து வருகின்றனர் இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று 23.09.24 அரசரடி சந்திப்பினில்.மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் S.வனிதா அவர்கள். போக்குவரத்து சிக்னலில். முறையாக ஸ்டாப் லைனில் நிற்கும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில். பேனா, இனிப்புகள்,மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். இவருடன் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. இளமாறன். திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published.