Police Department News

போக்குவரத்து வார்டன்கள் அமைப்பில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு. மற்றும் சான்றிதழ்கள்

போக்குவரத்து வார்டன்கள் அமைப்பில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு. மற்றும் சான்றிதழ்கள்

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு போலிஸ் டிராபிக் வார்டன் அமைப்பின் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி.S.வனிதா அவர்கள் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் திரு.இளமாறன், திரு. செல்வின், மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திரு.தங்கமணி, கார்த்திக், ரமேஸ்குமார், பூரணகிருஷ்ணன், ஷோபனா ஆகியோர்கள் மற்றும் இந்த அமைப்பில் பணிபுரியும் டிராபிக் வார்டன்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய திரு.தவமணி அவர்களுக்கு தலைமை போக்குவரத்து காப்பாளராக பதவி உயர்வு அளித்ததையும், திரு சௌந்தரராஜன் அவர்களுக்கு துணை தலைமை போக்குவரத்து .காப்பாளராக பதவி உயர்வு அளித்ததையும் பாராட்டி வாழ்த்துகள் வழங்கப்பட்டன.மதுரையில் போக்குவரத்து நெருக்கடியான பகுதிகளில் காவலர்களுடன் இணைந்து திறம்பட செயல்படும் வார்டன்களை பாராட்டி விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்ப்பட்டன.முடிவில் நிர்வாக அதிகாரி லட்சுமிநாராயணன் அவர்கள் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.