Police Department News

மதுரை பெண் போலீஸ் ஏட்டு மாரடைப்பால் இறந்தார்.

மதுரை பெண் போலீஸ் ஏட்டு மாரடைப்பால் இறந்தார்.

மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் சுமித்ரா (வயது 47). இவர் மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக இருந்தார். 

சுமித்ராவின் மகள் தர்ஷி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். அப்போது முதலே சுமித்ரா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதன் காரணமாக சுமித்ராவுக்கு கால்கள் வீங்கியது. எனவே அவர் கடந்த 4-ம் தேதி முதல் மருத்துவ விடுப்பு எடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் சுமித்ரா நேற்று மருத்துவ சிகிச்சைக்காக மாட்டுத்தாவணி தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மிகுந்த வலியுடன் அலறியவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி சுமித்ரா பரிதா பமாக இறந்தார்.

மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஏட்டு சுமித்ரா மாரடைப்பால் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவரது உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

சுமித்ராவின் கணவர் மீனாட்சிசுந்தரம், ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.