National Police News

திருமங்கலம் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டிைய போலீசார் மீட்டனர்

திருமங்கலம் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டிைய போலீசார் மீட்டனர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களாக ஆதரவின்றி தனியாக தவித்து வந்தார். 

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் மூத்த குடிமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திருமங்கலம் தாசில்தார் அனந்த கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். 

இதனைத்தொடர்ந்து தாசில்தார்,  கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன், கள பொறுப்பு அதிகாரி ஞானகுரு ஆகியோர் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டியை மீட்டனர். 

அவரிடம் விசாரித்தபோது, அவரது பெயர் ஜோதியம்மாள் (வயது 90) என்பதும், தஞ்சாவூரில் மகளுடன் வசித்து வந்ததாகவும், மகளுடன் கோபித்துக் கொண்டு விருதுநகர் சென்ற அவர், மீண்டும் மதுரை செல்லும் வழியில் ங்கலத்தில் இறங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.

அதிகாரிகள் அவரைமீட்டு திருநகர் காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் மூதாட்டியின்  மகன் செல்வராஜூவுக்கும் தகவல் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.