Police Department News

சிறுமிக்குத் தொல்லை கொடுத்து தாக்கினார்!’ -சென்னையில் சிக்கிய

சிறுமிக்குத் தொல்லை கொடுத்து தாக்கினார்!' -சென்னையில் சிக்கிய தந்தையின் நண்பர்வீட்டில் தனியாக இருந்த 16 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையின் நண்பரை போலீஸார் கைது செய்தனர். சென்னை தலைமைச் செயலக காலனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியின் உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதில்,எங்களின் உறவுக்காரச் சிறுமி, நேற்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் பஷீர் அங்கு வந்துள்ளார். அவர், சிறுமியிடம் பேசியுள்ளார்.அப்போது சிறுமிக்கு அப்துல் பஷீர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அலறியதும் அவரைத் தாக்கிவிட்டு அப்துல் பஷீர் தப்பி ஓடிவிட்டார். அதனால் மனவேதனையடைந்த சிறுமி, தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் குடித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அப்துல் பஷீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர்.புகாரின்பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் தலைமைச் செயலக அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்துல் பஷீரிடம் விசாரித்தனர். அதேநேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியிடமும் போலீஸார் விசாரித்தனர். விசாரணை அடிப்படையில் அப்துல் பஷீரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சிறுமியின் தந்தையும் அப்துல் பஷீரும் நண்பர்கள். அப்துல் பஷீர் சமோசா வியாபாரம் செய்துவருகிறார். வீட்டில் தனியாக சிறுமி இருப்பதைத் தெரிந்துகொண்ட அப்துல் பஷீர் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதைச் சிறுமி தடுத்ததால் அப்துல் பஷீர் அவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிவிட்டார். அதனால் மனம் வேதனையடைந்த சிறுமி, விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து அப்துல் பஷீரைக் கைது செய்துள்ளோம்” என்றனர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.