Police Department News

கல்லூரி மாணவி தெய்வச் செயல் வழக்கு விசாரணை பற்றி வெளியான தவறான செய்திக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு

கல்லூரி மாணவி தெய்வச் செயல் வழக்கு விசாரணை பற்றி வெளியான தவறான செய்திக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வச் செயல் என்பவரால் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டது சம்பந்தமாக கடந்த 22 ஆம் தேதி Red pix என்ற சேனலில் வெளியிடப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

மேற்படி சம்பவம் தொடர்பாக தெய்வச் செயல் என்பவர் மேற்படி பெண்ணுடன் போலியான பூசாரியை வைத்து திருமணம் செய்து கொண்டார் என்றும் அதற்கு சாட்சியாக அவரின் அக்கா என்று கூறிக்கொண்டு போலியான நபரை உடன் அழைத்து வந்தார் என்றும் மேற்படி காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு மாறானது மேலும் காவல்துறை விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு எந்தவிதமான நிர்பந்தமும் இன்றி திருமணம் நடைபெற்றதாக தெரிய வருகிறது மேற்படி திருமணம் நடைபெற்றதற்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளன

அப்பெண்ணின் அப்பா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சில அரசியல் கட்சியினரிடம் சென்று முறையிட்ட பிறகே காவல்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காணொளியில் கூறியிருப்பது உண்மைக்கு மாறானது இச்சம்பவம் தொடர்பாக மேற்படிப் பெண் கொடுத்த புகாரின் பேரில் 10. 5. 2025 அன்றே அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது முதல் தகவல் அறிக்கையின் நகலை அப் பெண்ணிற்கு கொடுத்தபோது அவர் கையொப்பமிட மறுத்து நகலை வாங்கவில்லை

மேலும் விசாரணையில் பெண்ணிடம் வழக்கிற்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டதாக காணொளியில் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரணை செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தலின்படி அனைத்து நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டு வழக்கு விசாரணை அதிகாரியால் வழக்கிற்கு சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டுமே அப்பெண்ணிடம் கேட்கப்பட்டு வழக்கிற்கு தேவையான தகவலை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது

மேற்படி பெண் தெய்வச் செயல் இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து விசாரித்ததாகவும் விசாரணையில் தெய்வ செயல் அப்பெண் வேண்டாம் என்று சொல்லிய போதிலும் அவர் திருமணம் செய்ததாக ஒப்புக்கொண்டதை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்ததாக காணொளியில் கூறியிருப்பது உண்மைக்கு மாறானது மேற்படி பெண் காவல்துறையினர் விசாரணை செய்ததை மிகைப்படுத்தி கூறியுள்ளார் அதுபோல எதுவும் நடைபெறவில்லை

மேற்படி தெய்வச்செயல் என்பவர் அரசியல் கட்சி பொறுப்பில் இருக்கும் காரணத்தினால் காவல்துறையினர் அவரைக் காப்பாற்ற நினைப்பதாகவும் அதனால் தன்னை அலை கழித்ததாகவும் காணொளியில் கூறியிருப்பது உண்மைக்கு மாறானது காவல்துறையினரால் எந்த பாகுபாடும் இன்றி முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

அப்பெண் மருத்துவமனையில் இருந்தபோது வலுக்கட்டாயமாக சிகிச்சையில் பாதியிலேயே மிரட்டி அழைத்துச் செல்லப்பட்டதாக காணொளியில் குறிப்பிட்டு இருந்தனர் காவல்துறையினர் விசாரணையில் மேற்படி பெண் அவரின் விருப்பத்தின் பேரிலேயே மருத்துவமனையில் இருந்து சென்றுள்ளார் என தெரிய வருகிறது
கடந்த ஏப்ரல் 17 அன்று தெய்வச் செயலின் முதல் மனைவி அப்பெண்ணின் அம்மாவிற்கு போன் செய்து மிரட்டியதாகவும் ஏப்ரல் 18 அன்று தெய்வச் செயல் அந்தப் பெண்ணை அடித்ததாகவும்எங்கு அழைத்தாலும் வரவேண்டும் என்று மிரட்டியதாகவும் மற்றும் மே 5 அன்று அப்பெண் தேர்வு எழுத சென்றபோது தெய்வச் செயல் அடித்து வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றதாகவும் காணொளியில் கூறப்பட்டுள்ளது இது சம்பந்தமாக இதுவரை நடைபெற்ற விசாரணையில் எந்தவித ஆதாரமும் கிடைக்கப்பட வில்லை.தொடர்ந்து காவல்துறை விசாரணை நடைபெற்ற வருகிறது

Leave a Reply

Your email address will not be published.