
சிவகிரி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்து, செயின் கம்மல் ஆகியவற்றை பறித்து சென்ற இரண்டு பெண்களை கைது செய்து அவர்களின் சொத்துக்கள் பறிமுதல்
சிவகிரி குமாரபுரத்தைச் சேர்ந்த செல்வி வயது 50 தனியாக இருந்து வருகிறார் இவருக்கு முன்பழக்கம் கொண்ட சொக்கநாதபுரத்தை சேர்ந்த மாரி என்ற பூ மாரி வயது 40 அவள் மகள் மதுமிதா இருவரும் 27.5.25 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு செல்வி வீட்டுக்கு வந்து தனியாக இருந்த செல்வியிடம் மகளின் துப்பட்டாவை செல்வி கழத்தில் போட்டு நெருக்கி தலையணையை செல்வி முகத்தில் அமுக்கி செல்வி மயக்க நிலை வந்த பின்பு செல்வியிடமிருந்து தங்க செயின் கம்மல் மாட்டி சுமார் மூன்று பவுன் எடை கொண்டு தங்க நகைகளை பறித்து சென்றுள்ளனர்
காயம் அடைந்த செல்வியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி பின் விசாரணை செய்து கொள்ளையடித்த எதிரிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் உத்தரவு படி துணை கண்காணிப்பாளர் திரு. மீனாட்சி நாதன் மேற்பார்வையில் ஆய்வாளர் பாலமுருகன் உதவி ஆய்வாளர் வரதராஜன் மற்றும் காவலர்கள் விசாரணையை துரிதப்படுத்தி எதிரிகள் மாரி என்ற பூமாரியும் மற்றும் மகள் மதுமிதாவையும் சங்கரன் கோவில் தனியார் விடுதியில் வைத்து கைது செய்து கொள்ளையடித்த சொத்துக்களை கைப்பற்றி எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.
விரைவாக செயல்பட்டு சில மணி நேரங்களில் எதிரிகளை கைது செய்த காவல் அதிகாரிகளை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினர்.
