
தனியார் செய்தி தொலைக் காட்சியில் மாட்டுத்தாவணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாக பிரியன் என்பவர் தன்னை ஜாதி வன்மம் கொண்டு காலில் தாக்கியதாக பழனிச்செல்வம் என்பவர் தெரிவித்ததாக வந்த செய்தியின் மீதான காவல்துறையின் மறுப்பு அறிக்கை
10/05/2025 ம் தேதியன்று மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மேலூர் செல்லும் வளர் நகர் மெயின் ரோட்டில் ஏசி மெக்கானிக் கடை நடத்தி வரும் மதுரை ஒத்தக்கடை காந்தி நகரில் குடியிருக்கும் பூசாரி என்பவரது மகன்களான பழனி செல்வம் வயது 34 அவரது சகோதரன் ராஜசேகரன் வயது 38 மற்றும் மதுரை சமட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த புகழேந்திரன் மகன் தேசிகன் வயது 31 ஆகியோர் மிகுந்த மது போதையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் நடமாடும் பொது இடத்தில் ஒருவருக்கொருவர் முகம் சுழிக்கும் அளவிற்கு அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டுக் கொண்டிருந்த அவர்களை
அருகில் குடியிருக்கும் ராபர்ட் வயது 30 என்பவரின் மனைவி மேற்படி பழனிச்செல்வம் என்பவரிடம் பெண்கள் இருக்கும் இடத்தில் ஏன் இவ்வளவு ஆபாசமாக பேசி அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள் என கேட்டதற்கு அவரையும் கெட்ட வார்த்தைகளால் திட்டியும் தட்டி கேட்ட ராபர்ட் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.உடனே ராபர்ட் அருகில் உள்ள மாட்டுத்தாவணி சோதனைச் சாவடி சென்று அங்கு பணியில் இருந்த காவலரிடம் தெரிவிக்க அந்தக் காவலர் வந்து விசாரிக்கும் போது மிகுந்த போதையில் கீழே விழுந்துள்ளனர்
மேற்படி காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாட்டுத்தாவணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன்
என்பவர் எதிரிகளை எச்சரிக்கை செய்தும் எதிரிகள் மிகுந்த போதையில் இருந்ததால் ராபர்ட் என்பவரை காவல் நிலையம் வந்து புகார் அளிக்குமாறு அறிவுறுத்தி சென்றுள்ளார் இந்நிலையில் ராபர்ட் என்பவர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் எதிரிகளின் மீது புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிந்து கொண்ட
எதிரி பழனிச்செல்வம் தானாக அரசு மருத்துவமனை சென்று தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்ந்துள்ளார்.
பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பழனிச்செல்வத்தை விசாரிக்க சென்ற மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீசாரிடம் தன்னை சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன்
ஜாதியைச் சொல்லி அடித்து காயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார் பின் இருபது நாட்கள் கழித்து கடந்த 30.05. 2025 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாட்டுத்தாவணி காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் தியாக பிரியன் ஜாதி வன்மம் கொண்டு காலில் தாக்கி காயத்தை ஏற்படுத்தியதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடத்தில் புகார் மனு கொடுத்தும் பத்திரிக்கையாளர்களிடமும் தன்னை மாட்டுத்தாவணி காவல் நிலையத்தைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் தியாக பிரியன் ஜாதி வன்மம் கொண்டு காலில் தாக்கியதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார்
மக்கள் நடமாடும் பொது இடத்தில் மது போதையில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு அநாகரிகமாகவும் அருவருக்கத் தக்க வகையில் ஒருவருக்கொருவர் கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டும் அருகில் குடியிருப்பவர்களுக்கு தொல்லை கொடுத்தும் அதை தட்டி கேட்ட புகார்தாரருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் பொதுமக்களில் புகாரின் பேரில் விசாரிக்க சென்ற காவல்துறையினரையும் அநாகரியமாக பேசியுள்ளார் மேலும் தன் மீது மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை தெரிந்து கொண்ட பழனி செல்வம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று அடையாளம் தெரியாத நபர் தன்னை அடித்ததாக சிகிச்சை பெற்றும் வழக்கிலிருந்து தப்பிக்க 20 நாட்களுக்குப் பின் மாவட்ட ஆட்சியரிடம் பொய்யான புகார் தெரிவித்தும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பொய்யாக பேட்டியும் கொடுத்துள்ளார்மேற்படி பழனிச்செல்வம் என்பவர் மீது ஏற்கனவே அடிதடி மற்றும் கொலை போன்ற முன் வழக்குகள் உள்ளதால் காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து தப்பிக்கும் பொருட்டு விசாரணைக்குச் சென்ற சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன் தன்னை காலில் அடித்து தாக்கியதாகவும் ஜாதியைச் சொல்லி மிரட்டியதாகவும் தவறாக பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்
எனவே தனியார் செய்தி தொலைக்காட்சியில் வெளிவந்த மாட்டுத்தாவணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தியாகப் பிரியன் பழனிச்செல்வம் என்பவரை ஜாதி வன்மம் கொண்டு காலில் அடித்ததாக தெரிவித்து வெளிவந்த செய்தியின் மீது மதுரை மாநகர காவல் துறை சார்பாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.
