
1.500 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா நான்கு மாதம் சிறைத் தண்டனை மற்றும் 4000 அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
11.07.2022 அன்று மதுரை மாவட்ட காவல்துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகன தனிக்கை செய்து வந்த நிலையில் கூடல் நகர காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கூடல் நகர் பஸ் ஸ்டாப் அருகில் வாகன தணிக்கை செய்த போது இந்த வழியாக வந்த ஹோண்டா இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 1.500 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றி அதை கடத்தி வந்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் மகன் கார்த்திக் வயது 34 மற்றும் மதுரை பாசிங்காபுரம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் அஜய் வயது 23 ஆகியவரு கைது செய்து கடத்தி வந்த கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது இவ் வழக்கு சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி காட்சிகள் விசாரணை முடிவுற்றுதீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட முதலாவது போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி திரு ஹரிஹர குமார் அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா கடத்திய எதிரிகளான கார்த்திக் மற்றும் அஜய் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சாட்சிகள் விசாரணையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபனமானதால் எதிரிகளை குற்றவாளிகள் என தீர்மானித்து எதிரிகளுக்கு தலா நான்கு மாத சிறைத் தண்டரையும் தலா நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தந்த கூடல் புதூர் காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்
