
மதுரை நகரில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் நான்கு நபர்கள் கைது அவர்களிடமிருந்து 13 இரு சக்கர வாகனங்கள் மீட்பு
கடந்த 15. 06. 2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் நகரில் பல்வேறு இடங்களில் காவலர்கள் தீவிர வாகன தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை கோ புதூர் ஐடிஐ பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் காவலர்களைக் கண்டதும் இருசக்கர வாகனத்தை வேகமாக திருப்பி தப்பிக்க முயற்சி செய்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்த போது மேற்படி வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தொடர்ந்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த லவக்குமார் என்பவரின் மகன் தினேஸ்வரன் வயது 33 என்பதும் விசாரணையில் புதூர் மற்றும் தல்லாகுளம் பகுதிகளில் சுமார் 13 க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது
மேலும் திருடிய இருசக்கர வாகனங்களை எல்லாம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் இந்து முன்னணி நகரத் தலைவராக உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரது மகன் பாலாஜி வயது 32 என்பவரிடமும் நாமக்கல் குமாரபாளையம் நகர பாரதிய ஜனதா கட்சியின் தரவு மேலாண்மை மாவட்டத் துணைத் தலைவராக உள்ள காந்திநகர் பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவரது மகன் விவேக் பாலாஜி வயது 40 என்பவரிடமும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி இளைஞர் அணி பொறுப்பாளராக உள்ள முருகன் என்பவரது மகன் கௌதம் வயது 23 ஆகியோர்களிடம் குறைந்த விலைக்கு விற்றதும் மேற்படி இருசக்கர வாகனங்கள் எல்லாம் திருடப்பட்டவை என தெரிந்தும் அவைகளை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர்என்பதும் அவர்கள் அந்த வாகனங்களை கிராமத்தில் உள்ளவர்களுக்கு அதிக விலைக்கு விற்று லாபம் நோக்கில் செயல்பட்டது தெரிய வந்தது காவல்துறையினர் மேற்படி வாகனங்களை திருடிய தினேஸ்வரன் மற்றும் திருட்டு இருசக்கர வாகனங்களை வாங்கிய பாலாஜி விவேக் பாலாஜி கௌதம் ஆகியோரை கைது செய்து மதுரை நகரில் புதூர் மற்றும் தல்லாகுளம் பகுதிகளில் திருடிய 13 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இந்த வாகன திருட்டு வழக்குகளில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் திருடிய இருசக்கர வாகனங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதன் மூலம் கிடைத்த ஆதாயத்தில் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட கோ புதூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர்களை வெகுவாக மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.
