Police Department News

காதல் தகராறில் கல்லூரி மாணவரை காரில் கடத்தி தாக்கிய சக மாணவர்கள்

காதல் தகராறில் கல்லூரி மாணவரை காரில் கடத்தி தாக்கிய சக மாணவர்கள்

தர்மபுரியை சேர்ந்தவர் 20 வயது மாணவர். இவர் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் படித்து வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பேசி வந்துள்ளர்.

இந்த நிலையில் அந்த பெண்ணை, அதே கல்லூரியில் படித்து வரும் திருப்பூரை சேர்ந்த 20 வயது மாணவர் ஒருதலையாக காதலித்து வந்தார். பலமுறை காதலை கூறியும் அந்த பெண் ஏற்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், சம்பவத்தன்று, தனது நண்பர்கள் 7 பேருடன், ஈச்சனாரியில் விடுதியில் தங்கி இருந்த தர்மபுரி வாலிபரை பேசுவதாக அழைத்து தாக்கினார். பின்னர் காரில் கடத்தி சென்று சரமாரியாக தாக்கி ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் வீசி சென்றனர். பலத்த காயம் அடைந்த அந்த வாலிபர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார், கல்லூரி மாணவர்கள் 6 பேரை கைது செய்தனர். இதேபோல், இந்த மோதல் சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் 5 பேரையும், செட்டிப்பாளையம் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.