
மதுரை மாநகரப் போக்குவரத்து காவலர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் பாதுகாப்பு நலன் கருதி வழங்கிய கண் கண்ணாடிகள்.
மதுரை ஜூன் 17
மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகரப் போக்குவரத்து காவலர்களுக்கு மதுரை ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் முன்னதாக திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி அனைவரையும் வரவேற்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன். போக்குவரத்து துணை ஆணையர் வனிதா.
ஆகியோர் தலைமையில்
போக்குவரத்து
உதவி ஆணையர்கள் செல்வின். மற்றும்
இளமாறன்.
ஆகியோர் முன்னிலையில்
மாநகர காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவலர்களுக்கு காவல் ஆணையர் லோகநாதன். கண் கண்ணாடிகள் வழங்கினார்கள்.
இந்த விழாவில்
மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் பூர்ண கிருஷ்ணன், ரமேஷ் குமார்,
தங்கப்பாண்டி,
கார்த்திக்,
சுரேஷ்,
ராஜேஷ் கண்ணா,
பஞ்சவர்ணம்,
ஆகியோர் உட்பட
உதவி ஆய்வாளர்கள்
செல்வகுமார், ராஜவேல்பாண்டி, லிங்ஸ்டன், சந்தானகுமார்,
ஆகியோர் உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ராமச்சந்திரா கண் மருத்துவமனை நிர்வாகமும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரும் சிறப்பாக செய்திருந்தனர்.
