Police Department News

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின்90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற காவலர்களின் வாரிசுகளை கௌரவப்படுத்தும் விழா

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின்
90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற காவலர்களின் வாரிசுகளை கௌரவப்படுத்தும் விழா

விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்
ஆளிநர்களின் வாரிசுகள் 24 பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் மற்றும் 18 பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றதற்காக 42 மாணவ மாணவியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. P.சரவணன் IPS அவர்கள் தலைமையில் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்
திரு.ரவீந்திர குமார் குப்தா IPS அவர்கள் திண்டிவனம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.பிரகாஷ் அவர்கள், ஆடிட்டர்
திரு.முரளி அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் 24 பேர் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் 18 பேர் மற்றும் மாணவ மாணவியர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்களின் எதிர்கால நலன்கள் குறித்தும், கல்வி வளர்ச்சி குறித்தும் ஒழுக்கம் குறித்தும் மேற்படிப்பின் அவசியம் குறித்தும் அறிவுரைகள் வழங்கி மாணவ மாணவியர்களை பாராட்டி
ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.