Police Department News

மதுரையில் போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி

மதுரையில் போதை பொருள் ஒழிப்பு தினம் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி

26.06.2025 அன்று மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி “ANTI DRUG CLUB” இணைந்து, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்று “போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை” கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியானது மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் துவங்கி பசுமலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகிகள், மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.