
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் M. கல்லுப்பட்டி காவல் நிலைய பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக M. கல்லுப்பட்டி காவல் நிலைய குற்ற எண்: 49/2015 U/s 147,148,294(b),341,342, 302 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 1) வனராஜா @ வனராஜன் (73) த/ பெ கூவதேவர், மீனாட்சி மூப்பன்பட்டி மதுரை. 2) சதீஷ்குமார் (45) த/பெ வனராஜா @ வனராஜன், மீனாட்சி மூப்பன்பட்டி மதுரை. ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ5,000 அபராதம் விதித்து V th Additional District Session Court தீர்ப்பு வழங்கியது.
அதன் பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் எதிரிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் திரு. சிவக்குமார், மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு. செல்வகுமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்..
