Police Department News

60 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது.

60 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது.

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி 11.02.2020 ந் தேதி B1 விளக்குத்தூண் ச&ஒ காவல் ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் கான்பாளையம் 3வது தெரு சந்திப்பு, அண்ணாமலை சரக்குக்கடை அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மூட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் மணிகண்டன் 45/2020,
த/பெ.கிருஷ்ணமூர்த்தி, கான்பாளையம், மதுரை என்பது தெரியவந்தது. எனவே மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து 60 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பணம் ரூபாய்.1,89,630/- ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மதுரை மாநகர் முழுவதும் தீவிர சோதனை நடத்த காவல் ஆணையர் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.