சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த
காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று (14.02.2020) குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். கலைந்து செல்ல மறுத்த நிலையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சமயம், போலீசார் மீது கூட்டத்தில் இருந்து கற்கள் வீசப்பட்டன. இதில் மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் திருமதி.B.விஜயகுமாரி. இ.கா.ப அவர்கள் உள்பட காவல் அதிகாரி மற்றும் ஆளினர்கள் நான்கு பேரும் காயமடைந்தனர்.
வண்ணாரப்பேட்டை கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்த V-4 ராஜமங்கலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.ராஜ்குமார், சென்னை ஆயுதப்படை பெண் காவலர்கள் கலா மற்றும் உதயகுமாரி ஆகியோரை, மருத்துவ சிகிச்சைக்காக வேண்டி, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று 15.02.2020 காலை ஸ்டான்லி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதுல் கூறினார்.