Police Department News

சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.

சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் அவர்கள் உத்தரவின்படி நெற்குப்பை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராமர் அவர்கள் 17.02.2020 அன்று நெற்குப்பை பகுதியில் உள்ள பொது மக்களை ஒன்று சேர்த்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எளிதாக புரியும்படி எடுத்துரைத்தார்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும் எனவும்

சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகனங்களை இயக்க தெரிந்திருந்தால் விபத்தினை தவிர்க்க முடியும் எனவும்

தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் எனவும்

மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்க கூடாது எனவும் அறிவுரைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.