Police Department News

சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது

சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின்படி தூத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மணிவண்ணன் அவர்கள் தலைமையில் தலைமை காவலர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் 22/02/2020 அன்று தூத்தூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தூத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களும் தங்கள் கிராமத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கையாக கம்பி வேலி போடுவது முதலிய அறிவுரைகள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிசிடிவி நிறுவுதல் மற்றும் முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.