நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட 87 செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் ஒப்படைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உத்தரவு படி கடந்த முன்று ஆண்டுகளாக தொலைந்த மற்றும் திருடப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 87 செல் போன்களை பறிமுதல் செய்ய cybr crime cell உதவியுடன் கூடிய தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் திருமதி G.மகாலெட்சுமி அவர்கள் மேற்பார்வையில் தீவிர தேடுதல் பாணியில் ஈடுபட்டு தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல் போன்களை மூன்றாம் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உரிமையார்களிடம் வழக்கினார் மேலும் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையை சேர்ந்த திரு.கோபிராஜா,உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) ,திரு.பாலமுருகன் முதல்நிலை காவலர், காவலர்கள் திரு ரவிச்சந்திரன், திரு வினோத் ஆகியோரை வெகுவாக பாராட்டினார்கள்.
“நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை “