Police Department News

மதுரையில் எல்லீஸ் நகர மதுபானக்கடையில் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு

மதுரையில் எல்லீஸ் நகர மதுபானக்கடையில் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு

மதுரை மாநகர், SS காலனி C.3 காவல் நிலையத்திக்கு உட்பட்ட பகுதியான எல்லீஸ் நகர் பிரதான 70 அடி பைப்பாஸ் சாலையில் மதுரை தலைமை போக்குவரத்து கழகம் அருகில் உள்ள எண் 5248.மதுபானக் கடையில் , கடை பூட்டியிருக்கும் சமயம் கடையின் மேற் கூரையை உடைத்து , சில மர்ம நபர்கள் 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்,

மறுநாள் கடை ஊழியர்கள் வழக்கம் போல் பகல் 10 மணியளவில் கடையை திறக்கும் போது மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர், உடனே, அந்த பகுதிக்குறிய C.3 காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு M.இளவரசன் அவர்களிடம் புகார் அளித்தனர், புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் திரு இளவரசன் அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் பாண்டியன் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 380, மற்றும் 457 ன் படி வழக்கு பதிவு செய்து, மற்றும் அந்த பகுதியில் உள்ள CCTV கேமராவின் பதிவுகளை வைத்து புலன் விசாரணை செய்து வருகின்றனர், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும் விரைவில் பிடித்து விடுவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்

போலீஸ் இ நியூஸ்
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.