Police Department News

மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர்

மனநலம் குன்றிய பெண்ணை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த தலைமை காவலர்

திருப்பூர் மாநகர் ஊரக காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் 612 திரு.சுரேஷ் அவர்கள் ரோந்து சென்று கொண்டிருக்கும்போது காசிபாளையம் பகுதியில் விலாசம் சொல்ல தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த மனநலம் குன்றிய ஒரு பெண்ணை மீட்டு பெரியபாளையம் பகுதியில் உள்ள மனநல காப்பகம் ஒன்றில் சேர்த்தார் பின்னர் அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்குமாறு செய்திகளை வெளியிட்டார்.இச்செய்தியை கண்ட அப்பெண்ணின் அண்ணன் தலைமை காவலர் சுரேஷை தொடர்பு கொண்டு அப்பெண் தனது தங்கை எனவும் வாட்ஸ் அப்பில் அவரது புகைப்படத்தை பார்த்ததும் தங்களை தொடர்பு கொள்வதாகவும் தெரிவித்தார் உடனே அவரையும் அவரது தாயையும் மனநல காப்பகம் வர வைத்து அந்தப் பெண்ணை அடையாளம் காட்டச் செய்து குடும்பத்துடன் சேர்த்து வைத்தார் அந்த குடும்பத்தினர் மனமார நன்றிகளை தெரிவித்து கொண்டு அந்த பெண்ணை தங்களுடன் அழைத்துச் சென்றனர் இச்செயலை செய்த தலைமை காவலர் அவர்களை திருப்பூர் மாநகர ஆணையர் திரு. சஞ்சய் குமார் (ஐபிஎஸ்) அவர்களும் திருப்பூர் மாநகர துணை ஆணையர் திரு. வெ.பத்ரி நாராயணன்(ஐபிஎஸ்) அவர்களும் வெகுவாக பாராட்டினர்

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.