Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில், பழிக்குப் பழி கொலை சம்பவம்

மதுரை, செல்லூர் பகுதியில், பழிக்குப் பழி கொலை சம்பவம்

மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான செல்லூர், போஸ்வீதி, தவமணி காம்பவுண்ட்டில் வசித்து வரும் சுப்ரமணி மகன், மதியழகன் வயது 53/2020, இவர் மனைவியை இழந்தவர். இவர் தனது மகன் இளங்கோவன் வயது 26/2020, உடன் வசித்து வருகிறார். இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வருகின்றனர், சம்பவத்தன்று இருவரும் தனித்தனியே வேலைக்கு சென்று விட்டு மாலை சுமார் 5.30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர். இரவு 8 மணிக்கு, சாப்பாடு முடித்து விட்டு அவரவர் ரூமிற்கு படுக்கச் சென்று விட்டனர். அதன் பின் இரவு சுமார் 10 மணியளவில் தனது மகன் ரூமிலிருந்து அலரல் சத்தம் கேட்டு எழுந்து சென்று போய் பார்க்கையில், அங்கே தனது மகன் ரூமிலிருந்து தனக்கு நன்கு தெரிந்த தனது ஏரியாவை சேர்ந்த ஆறு பேர் கையில் வாளுடன் வெளியே ஓடி வந்தனர், வந்தவர்கள் உன் மகனை போட்டு விட்டோம், நீ ஓடி விடு இல்லையேல் உன்னையும் போட்டு விடுவோம் என கூறிக் கொண்டே தப்பி ஓடி விட்டனர். உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க, உடனே செல்லூர் D2, காவல் நிலைய ஆய்வாளர் கோட்டைச்சாமி அவர்கள தலைமையில் காவலர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்,

ஆய்வாளர் கோட்டைச்சாமி அவர்களின் உத்தரவுப்படி சார்பு ஆய்வாளர் ஜான் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147,148,302, 506 படி வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளான, செல்லூரைச் சேர்ந்த மதுரை வீரன் மகன் அருண்பாண்டி வயது 26/2020, மீனாம்பாள்புரத்தை சேர்ந்த ஜவஹர்லால் மகன் மாலீக் பாட்ஷா வயது 21/2020, செல்லூரை சேர்ந்த செல்வம் மகன் வீரபாண்டி வயது 24/2020, செல்லூரை சேர்ந்த மகாலிங்கம் மகன் கொப்பரை என்ற பாலசுப்ரமணி வயது 25/2020, போஸ் வீதியை சேர்ந்த கயல் கண்ணண் மகன் வெங்கடேஷ் வயது 20/2020, போஸ்வீதியை சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துப்பாண்டி வயது 24/2020, ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் , கடந்த 2018 ம் ஆண்டில் தங்கள் பகுதியில் இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏரியாவில் குடியிருக்கும் போஸ்வீதி முருகேசன் மகன்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் ஒரு குரூப்பாகவும், பல் செட் என்ற பிரவின்குமார், வீரபாண்டி, ஒரு குரூப்பாகவும் இருந்து வந்தனர். இந்த இரண்டு குரூப்பிற்கும் வாய் தகராறு ஏற்பட்டு சமரசம் ஆகாத காரணத்தால், 13/08/2018 அன்று இரவு பல் செட்டும் அவனது அண்ணன் அருண்பாண்டி ஆகியோரை, முருகேசன் மகன்கள் மற்றும் அவனது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து அஹிம்சாபுரம் முதல் தெரு விசாலம் , அய்யப்பன் தெரு சந்திப்பில் வைத்து பல்செட் என்ற பிரவீன்குமாரை கொலை செய்தனர், என்றும் அதில் அருண்பாண்டிக்கும் காயம் ஏற்பட்டதாகவும் அதன் பின் முருகேசன் குடும்பத்தினர் ஜெயிலுக்கு போய் விட்டு வந்து ஏரியால் இருந்து வருவதாகவும் , அவர்களது மகன்கள் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருவதாகவும் இங்கு வருவது கிடையாது என்றும் தெரிய வந்தது. இதற்கிடையில், கொலையுண்ட இளங்கோ, அதே ஏரியாவில் இருப்பதாலும், கொத்தனார் வேலை பார்ப்பதாலும், முருகேசன் மகன்களுடன் நல்ல பழக்கம் இருந்து வந்தது. எனவே இளங்கோவனும் முருகேசன் மகன்களின் குரூப்பை சேர்ந்தவன் என கணித்து 15/07/2020 அன்று இளங்கோவை கொலை செய்ததாக தெரிய வந்தது, ஆக கொலை செய்த ஆறு பேரையும் விரைந்து கைது செய்து, விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர், அதன் பிறகு நீதி மன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.