Police Department News

வீட்டில் உள்ள பீரோவை உடைத்து பணத்தை திருடியவர் கைது

வீட்டில் உள்ள பீரோவை உடைத்து பணத்தை திருடியவர் கைது.

திருநெல்வேலி மாவட்டம
பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துசாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி(39), இவர் 05.09.2020 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு தனது மகன், மகளுடன் சென்றுள்ளார்.

பின்பு 06.09.2020 அன்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பணம் ரூபாய் 10,600 திருடு போய் விட்டதாக
பணகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சரஸ்வதி வீட்டில் உள்ள பணத்தை திருடியது முத்துசாமிபுரம் நடுத்தெருவை சேர்ந்த காலன்(20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் திரு. மகேந்திரன் அவர்கள் வழக்கு பதிவு செய்து காலன் என்பவரை கைது செய்து பணத்தை மீட்டு சரஸ்வதியிடம் ஒப்படைத்தார்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.