Police Department News

தவறவிட்ட 3 பவன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த சிவகங்கை போலீசார்.

தவறவிட்ட 3 பவன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த சிவகங்கை போலீசார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம் புழுதிபட்டி காவல் நிலைய சோதனைச்சாவடி அருகே அடையாளம் தெரியாத நபர் 3 பவுன் தங்க நகையுடன் கூடிய கைப்பையை தவறவிட்டு சென்றுள்ளனர் .

அப்பொழுது புழுதிபட்டியை சேர்ந்த சிவா என்பவர் அவ்வழியாக சென்ற போது கீழே கிடந்த கைப்பையை கண்டறிந்து அருகில் உள்ள புழுதிபட்டி சோதனை சாவடியில் பணியிலிருந்த காவலரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவுடன் தனிப்பிரிவு காவலருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து புழுதிபட்டி காவல் நிலைய போலீஸார் மற்றும் தனிப்பிரிவு காவலர் தீவிர விசாரணை மேற்கொண்டு நகையை கீழே தவறவிட்டு சென்ற நகையின் உரிமையாளர் உலகம்பட்டியை சேர்ந்த சின்னபொண்ணு அவர்களை கண்டறிந்து 3 பவுன் தங்க நகையை ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.