Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவீண்;குமார் அபிநபு இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் : 25.09.2020

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவீண்;குமார் அபிநபு இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரத்தில் உள்ள வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் நாளை (26.09.2020) நடைபெற உள்ள 17ம் ஆண்டு நினைவு முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 15 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 48 காவல் ஆய்வாளர்கள், 94 உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தவிர மாவட்ட எல்லைகளில் 15 சோதனை சாவடிகளும், மாவட்டத்திற்குள் 13 சோதனை சாவடிகளும் அமைத்து திவீரமாக கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துணை துணை தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று (25.09.2020) மாலை ஆறுமுகநேரி, அன்னை எஸ்.பி மஹாலில் பாதுகாப்பு குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்;கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் முழுவதும் 144 தடைஉத்தரவு அமலில் உள்ளதால் ஊர்வலத்திற்கோ, அன்னதானத்திற்கோ எவ்வித அனுமதியும் இல்லை எனவும், ஜாதி ரீதியாக சட்டை அணியவோ, பிற ஜாதியினரை புண்படும்படி வாசகங்களை பயன்படுத்தி கோஷம் எழுப்பக்கூடாது எனவும், நீதிமன்ற உத்தரவு பிரகாரம் டிஜிட்டல் பேனர்கள் எதுவும் வைக்க அனுமதியில்லை எனவும், மேலும் வெங்கடேஷ் பண்ணையார் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளதும் விவரிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் காவல்துறை துணைத்தலைவர் திரு. பிரவீண்குமார் அபிநபு, இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் ஆகியோருடன் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. கோபி, திரு. செல்வன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப, பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.