Police Department News

கடனை தராததால் பெண்ணை ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தவர் கைது.

கடனை தராததால் பெண்ணை ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தவர் கைது.

திருவள்ளூர் அருகே வாங்கிய கடனை திருப்பித் தராததால் ஆத்திரம் அடைந்த நிலையில் பெண்ணிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டதோடு ஒரு நாள் முழுவதும் ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் குறித்து தனியார் நிறுவன பணியாளரை மணவாளநகர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதற்கு தாரமல் காலதாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பணத்தை அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்ததாக சங்கர்ராஜ் காவல் நிலையத்தில் சரவணன் மீது புகார் செய்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன், சனிக்கிழமை மாலையில் சங்கர்ராஜின் வீட்டிற்கு சென்ற போது மனைவி ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் இருந்தாராம். அப்போது, கணவர் வெளியில் சென்றிருப்பதாக கூறியதை கேட்காமல், பணத்தை கேட்டு தகராறு செய்ததாகவும், பின்னர் ஜெயலட்சுமியை மிரட்டி ஆடையின்றி வீட்டிற்குள் ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்தாராம்.

அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் பணத்தை கொடுக்க வலியுறுத்தியதோடு அவரது கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு சென்றாராம். இதுகுறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் செய்தாராம்.
அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனியார் நிறுவன பணியாளரான சரவணனை கைது செய்தனர். மேலும், கடனை திருப்பித் தராததால் பெண்ணை ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.