Police Department News

மதுரை, திடீர் நகர் பகுதியில் குடும்ப பகை காரணமாக பெண்ணை ஹெல்மட்டால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு

மதுரை, திடீர் நகர் பகுதியில் குடும்ப பகை காரணமாக பெண்ணை ஹெல்மட்டால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு

மதுரை, மாநகர் C1, திடீர் நகர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியான வாய்கால் தெரு, ஹீரா நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வன் மனைவி லெக்ஷிமி வயது 30/2020, இவரது கணவர் செல்வன் துப்பரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்

04/10/2020 ம் தேதி மாலை 3.30 மணியளவில் லெக்ஷிமி தனது மூத்த மகன் , மற்றும் இளைய மகன் ஆகியோருடன் தனது மச்சான் பாண்டி அவர்களின் வீட்டின் முன்பாக பேசிக்கொண்டிருந்த போது அங்கு இரு சக்கரவாகனத்தில் வந்த லெக்ஷிமியின் கொழுந்தன் முத்துக்குமார் என்பவர் லெக்ஷிமியின் மகன்களை பார்த்து முன் விரோதம் காரணமாக சத்தம் போட்டார், உடனே அதை தட்டிக்கேட்க வந்த லெக்ஷிமியை தகாத வார்த்தைகளால் திட்டியும் தன் கையில் வைத்திருந்த ஹெல்மட்டால் தாக்கியும் உள்ளார். மேலும் லெக்ஷிமியின் கணவரைகீழே தள்ளி விட்டு கம்பால் தாக்கியும் உள்ளார்.

மேலும் லெக்ஷிமியையும் அவர் கணவரையும் பார்த்து உங்களை கொள்ளாமல் விட மாட்டேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் லெக்ஷிமி அவர்கள் திடீர் நகர் C1, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் ஆய்வாளர் கீதாலெக்ஷிமி அவர்களின் உதகதரவின்படி சார்பு ஆய்வாளர் திரு பணராஜ் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.